திருப்பதி ஏழுமலையான் தங்க தேரோட்டம்.


திருப்பதி மலையில் நடைபெறும் ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவ ஆறாவது நாளான இன்று மாலை தங்க  தேரோட்டம் நடைபெற்றது. தங்க தேரோட்டத்தை முன்னிட்டு உற்சவர் மலையப்ப சாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராக கோவிலில் இருந்து புறப்பட்டு தங்கத்தேரில் எழுந்தருளினார்.

 தொடர்ந்து உற்சவர்களுக்கு தீப தூப நைவேத்திய சமர்ப்பணம் செய்யப்பட்டது. அதன் பின் மாலை 4 மணி முதல் ஏழுமலையான் கோவில் மாட வீதிகளில் உற்சவர் மலையப்ப சாமியின் தங்கத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

 அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி சமர்ப்பித்து வழிபாடு மேற்கொண்டனர்.



Leave a Comment