வருடாந்திர பிரம்மோற்சவம்... பெரியசேஷ வாகனத்தில் திருப்பதி ஏழுமலையான்...


திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் முதல் நாளான இன்று இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சாமியின் பெரிய சேஷ வாகன புறப்பாடு கோவில் மாட வீதிகளில் கோலாகலமாக நடைபெற்றது.

பெரிய சேஷ வாகன புறப்பாட்டை முன்னிட்டு கோவிலில் இருந்து உபய நாச்சியார்கள் சமேதராக புறப்பட்ட மலையப்ப சுவாமி வாகனமண்டபத்தை அடைந்தார். அங்கு பெரியசேஷ வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர்களுக்கு சமர்ப்பணம் நடைபெற்றது.

 தொடர்ந்து பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே கோவில் மாட வீதிகளில் ஏழுமலையானின் பெரியசேஷ வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது. அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பெரிய சேஷ வாகன புறப்பாட்டை கண்டு வழிபாடு மேற்கொண்டனர்.



Leave a Comment