2000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஆதி காமாட்சி அம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம்...


திருவண்ணாமலையில் 2000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஆதி காமாட்சி அம்மன் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

திருவண்ணாமலை வடக்குவீதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ அருள்மிகு ஆதி காமாட்சி அம்மன்,பரிவார தெய்வங்கள் மகா கும்பாபிஷேகமும், தீபாரதனையும் விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக யாக சாலை அமைத்து நான்கு கால பூஜைகள் செய்யப்பட்டு பல்வேறு  முலீகை பொருட்களை கொண்டு யாகம் நடத்தி பின்னர் மஹா பூர்ணாஹிதி நடைபெற்றது.

பின்னர் புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு சென்று கோபுர உச்சியில் அமைந்துள்ள கலசத்தில் சிவாச்சாரியார்கள்  வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகம், தீபாராதனை வெகு விமரிசையாக நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.

 திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா தோன்ற மூல காரணமான ஆதி காமாட்சி அம்மன் திருக்கோவில் விளங்குவது குறிப்பிடத்தக்கது.



Leave a Comment