அன்லிமிடெட் எண்ணிக்கையில் லட்டு.... திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு...


திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட பின் தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு தலா ஐம்பது ரூபாய் கட்டணத்தில் அன்லிமிடெட் எண்ணிக்கை லட்டு பிரசாத விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளாராவ் தெரிவித்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையானை  கும்பிட்ட பக்தர்களுக்கு அவர்களின் தேவைக்கு ஏற்ற வகையில் அன்லிமிடெட் ஆக லட்டு வழங்க வேண்டும் என்பதே தேவஸ்தானத்தில் பாலிசி என்று கூறிய திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ், செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் சாமி கும்பிட்ட பின் தரிசன டிக்கெட்டுடன் வரும் பக்தர்களுக்கு தேவையான எண்ணிக்கையில் தலா ஐம்பது ரூபாய் விலையில் லட்டுக்கள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 ஆனால் சாமி கும்பிடாமல் லட்டு மட்டுமே கேட்கும் பக்தர்களுக்கு ஆதார் அடிப்படையில் இரண்டு லட்டு மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறினார். திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ்  திருப்பதி மலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

ஆனால் இதுவரை தேவஸ்தான நிர்வாகம் பக்தர்களுக்கு அன்லிமிடெட் ஆக லட்டு வழங்க வேண்டும் என்ற பாலிசியை கவனிக்காமல் இருந்து விட்டதாகவும்,  கடந்த இரண்டரை மாதங்களாக தேவஸ்தான நிர்வாகத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை தொடர்ந்து நாளை முதல் ஏழுமலையானை வழிபட்ட பின் தரிசன டிக்கெட் அல்லது இலவச தரிசன டோக்கன் ஆகிய ஏதாவது ஒன்றுடன் லட்டு கவுண்டர்களுக்கு லட்டு வாங்க வரும் பக்தர்களுக்கு அவர்கள் வைத்திருக்கும் டிக்கெட்டுக்கு ஒரு லட்டு வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

அதனுடன் கூடுதலாக  தேவஸ்தானத்தின் பாலிசியை அடிப்படையாகக் கொண்டு பக்தர்கள் தலா 50 ரூபாய் விலையில் தங்களுக்கு எத்தனை லட்டுக்கள் தேவையோ அத்தனை லட்டுக்களை  அன்லிமிடெட் ஆக வாங்கி கொள்ளலாம் என்று கூறினார்.

மேலும் திருப்பதி மலையில் உள்ள இடைத்தரகர்களை ஒழித்து கட்டுவதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் சிறப்பான பலனை கொடுப்பதாக கூறிய அவர், சாமி கும்பிடாமல் திருப்பதி மலையில் இருந்து ஒரு சிலர் ஏராளமான லட்டுக்களை வாங்கி சென்று அவற்றை தங்கள் வீட்டு திருமணங்களில் உறவினர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்ததை காண முடிந்தது.

திருப்பதி தேவஸ்தான லட்டுக்களை வீட்டு விசேஷங்களில் உறவினர்களுக்கு வழங்குவதை அவர்கள் ஒரு கௌரவமாக கருதுகின்றனர். ஆனால் திருப்பதி லட்டு என்பது பிரசாதம். அதை எப்படி பயன்படுத்த வேண்டுமோ அப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்று அப்போது தெரிவித்தார்.



Leave a Comment