தென் திருப்பதி ஸ்ரீவாரி ஆலயத்தில் பவித்ரோற்சவம் நிகழ்ச்சி...


கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தென்  திருப்பதி என்றழைக்கப்படும்  ஸ்ரீவாரி மலையப்ப சுவாமி ஆலயத்தில்  பவித்ரோற்சவ உற்சவம் இன்று  மாலை விமர்சையாக நடைபெற்றது..

ஆவனி  மாதத்தில் நடைபெறும் இந்த பவித்ரோற்சவம் நிகழ்ச்சி துவங்கிய நிலையில் புண்ணியாக வாஜனம், மேதினி பூஜை, பூர்ணாஹூதி, திருவாராதனம், மந்திர புஸ்பம், பிரபந்த சாற்று முறை,  ஏகாந்த சேவை என நிகழ்வுகள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து  வாஜனம், பூர்ணாஹூதி, திருவாராதனம், ஸ்ரீ மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்நபன திருமஞ்சனமும் நடைபெற்றது. இதனையடுத்து இன்று விழாவின் முக்கிய நிகழ்வான உற்சவர் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பவித்ர மாலையுடன் நான்கு மாட வீதிகளில் திருவீதி உலா வரும் வைபவம் நடைபெற்றது..

அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மலையப்பசாமி ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருள  இசைவாதியங்கள் முழங்க வேத விற்பனர்களின் மந்திரங்கள் முழங்க நான்கு மாட வீதிகளின் வழியாக  வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்..பின்னர் யாக சாலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்..இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்..



Leave a Comment