சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் சிறப்பு கோ பூஜை வழிபாடு....


சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் ஆவணி மாத பிறப்பு  சிறப்பு கோ பூஜை வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.

இங்கு  ஆவணி மாத பிறப்பையொட்டி சிறப்பு கோபூஜை வழிபாடு நடந்தது. முன்னதாக கொடிமரத்து விநாயகர், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம், மகா தீபாரனை காட்டப்பட்டது.

தொடர்ந்து கோ சாலையிலிருந்து  வரவழைக்கப்பட்ட  புங்கனூர் குட்டை  பசு மாட்டிற்கு சிறப்பு வழிபாடு செய்து தீபாராதனை காட்டி கோபூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பசுமாட்டிற்கு மலர்களைக் கொண்டு பூஜை செய்து வாழைபழங்கள், அகத்திக்கீரை கொடுத்து வலம் வந்து வணங்கி வழிபட்டனர்.



Leave a Comment