திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு தேரோட்டம்...


திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு கமலாம்பாள் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆடிப்பூர விழா கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு இந்திர விமானம், பூத வாகனம், வெள்ளி யானை வாகனம், வெள்ளி காளை வாகனம், கைலாச வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் கமலா பால் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான கமலாம்பாள் தேரோட்டம் இன்றைய தினம் விமர்சையாக நடைபெற்றது.

திருவாரூர் கீழ வீதியில் தொடங்கிய தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தியாகராஜா கமலாம்பாள் என்ற கோஷத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோயிலின் நான்கு பிரதான வீதியிலும் வலம் வந்தது.



Leave a Comment