ஸ்ரீ சுயம்பு சிவப்பு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை...


திருவண்ணாமலை அடுத்த வில்வாரணி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சுயம்பு சிவப்பு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை  நடைபெற்றது.

தமிழகம் முழுக்க ஆடி கிருத்திகை தினமான இன்று அனைத்து முருகன் திருக்கோவிலிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்கள் பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த எலத்தூர் அடுத்த மோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆடிக்கிருத்திகை தினமான இன்று வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ‌சிவசுப்பிரமணிய சாமிக்கு பால், தயிர் தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அதிகாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

அதிகாலை முதல் சுயம்பு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த ஏராளமான முருக பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் மூன்று மணி நேரத்தில் மேலாக காத்திருந்து காத்திருந்து பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி பால்குடம் உள்ள தேவைகளை கையில் ஏந்தி முருகப்பெருமானுக்கு நேர்த்திக் கடன் செலுத்தி வழிபாடு செய்தனர்.



Leave a Comment