கூத்தனூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்...


திருவிடைமருதூர் அருகே  ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா கூத்தனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய திருப்பணிகள் நடைபெற்று முடிவற்ற நிலையில் மகா கும்பாபிஷேகத்திற்காக நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று கலசத்திற்கு தீபாரதனை காண்பிக்கப்பட்டு மேளதாளம் வேத மந்திரம் முழங்க ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ பாலமுருகன் சப்த கன்னிகைகள் ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ நாகாத்தம்மன் முதலிய மூல மூர்த்தி களுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது அதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சி சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்து வழிபட்டனர்.



Leave a Comment