திருமலையில் வைபவமாக நடைபெற்ற ஹனுமத் ஜெயந்தி கொண்டாட்டம்...


திருமலையில் வைபவமாக நடைபெற்ற ஹனுமத் ஜெயந்தி கொண்டாட்டம்.. விழாவில்  கலந்துகொண்டு அனுமனை தரிசித்த திரளான பக்தர்கள்.

திருமலையில் ஹனுமத் ஜெயந்தி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. திருமலையில் பாபநாசம் ஆகாச கங்கா செல்லும் வழியில்  ஜாபாலி என்ற இடத்தில் பிரசித்தி பெற்ற அனுமன் ஆலயம் அமைந்துள்ளது . இங்கு ஆஞ்சநேயர் சுயம்புவாக எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார்.

ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களில் பலர் இந்த  ஆலயத்திற்கு வந்து அனுமானை தரிசிப்பது வழக்கம் இன்று ஹனுமத்ஜெயந்தி விழா ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஜாபாலியில் ஆலயத்தில் கொலுவீற்றி ருக்கும்  அனுமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.  

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் செயல் அலுவலர் தர்மா ரெட்டி திருமலை ஏழுமலையான் ஆலயத்தில் இருந்து பட்டு வஸ்திரத்தை ஜாபாலி ஆஞ்சநேயருக்கு சமர்ப்பித்தார் . திருத்தல வரலாற்றின்படி  ஜாபாலி என்ற முனிவர் தனது சீடர்களுடன் இப்பகுதியில் இருந்து கொண்டு ஏழுமலையானுக்கு தொண்டு புரிந்து வந்ததாகவும் ராம பக்த ஹனுமானை தியானித்து அவரை வழிபட அனுமான் ஜாபாலி  முனிவருக்காக பிரதிக்ஷமாக தோன்றி அருள் பாலித்ததால்   ஜாபாலி அனுமான் என்று பெயர் பெற்று விளங்குகிறார்.



Leave a Comment