சட்டை நாதர் சுவாமி கோயிலில் கோ பூஜை வழிபாடு...


சீர்காழி சட்டை நாதர் சுவாமி கோயிலில் வைகாசி மாத பிறப்பை முன்னிட்டு  சிறப்பு கோ பூஜை வழிபாடு.

 மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டைநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார்.  இந்நிலையில்  வைகாசி  மாத பிறப்பையொட்டி சிறப்பு கோ பூஜை வழிபாடு நடந்தது. முன்னதாக கொடிமரத்து விநாயகர், பலிபீடம், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரம், மகா தீபாராதனை காட்டப்பட்டது.

தொடர்ந்து கோ சாலையிலிருந்து  வரவழைக்கப்பட்ட புங்கனூர் குட்டை பசு மாட்டிற்கு சிறப்பு வழிபாடு செய்து தீபாராதனை காட்டி கோ பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பசுமாட்டிற்கு வாழைபழங்கள், அகத்திக்கீரை கொடுத்து வணங்கி வழிபட்டனர்.



Leave a Comment