பிரத்தியங்கரா தேவிக்கு மகா சண்டியாகம்....


அரியலூர் பிரத்தியங்கரா தேவிக்கு மகா சண்டியாகம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம் பொய்யாத நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது சாமுண்டீஸ்வரி அம்மன் ஆலயம். இவ்ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று மிளகாய் சண்டி யாகம் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் ஆவனி மாத அமாவாசை முன்னிட்டு பிரத்தியங்கிரா தேவிக்கு  சண்டி ஹோமம் நடைபெற்றது. யாகத்தில் பக்தகர்கள் வேண்டுதலில் பேரில்  பொருட்கள் யாகத்தில் இடப்பட்டன. பின்னர் மஞ்சள் குங்குமம் திருநீறு உள்ளிட்ட மூலிகைகள் ஆரஞ்சு, ஆப்பிள், கொய்யா, திராட்சை உள்ளிட்ட பழங்கள் யாகத்தில் போடப்பட்டன.

தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் கடலூர் திருச்சி பெரம்பலூர் சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 



Leave a Comment