லட்சம் பேருக்கு சுதர்சனக் கிரியா பயிற்சி .....


வாழும் கலை அமைப்பின் நிறுவனரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு ஆனந்த அனுபவப் பயிற்சியினை நடத்தினார். 

முதல்முறையாக ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், ஆன் லைனில்  சுதர்சனக் கிரியா பயிற்சி நடத்தினார். இந்தியா முழுவதிலும் சுமார் 1800 மையங்களில் வாழும் கலையின் ஆனந்த அனுபவப் பயிற்சி நடத்தப்பட்டது.

நகைச் சுவையுடன் இணைந்த நடத்தப்பட்ட இந்த பயிற்சி கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பாராட்டு விமர்சனம் இரண்டையும் சமமாக ஏற்றுக் கொண்டு சாந்தமாக இருக்கும் திறனைக் கற்றறிந்தனர்.

எளிதாகப் பயிற்சி செய்யக் கூடிய முறையில் கற்றுத்தரப் படும் இந்த நுட்பங்கள் ஒருவர் நல்ல உடல்நலன் மற்றும் ஆனந்தத்தைப் பெற்றுச் செல்வார் என்று வாழும் கலை அமைப்பு தெரிவித்துள்ளது.

 



Leave a Comment