ஊத்துக்காடு கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி உறியடி ....


திருவாரூர் மாவட்டம், ஊத்துக்காட்டில் உள்ள ஸ்ரீ காளிங்க நர்த்தன கிருஷ்ணன் திருக்கோயிலில், வரும் ஆகஸ்ட் 25-ம் தேதி ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி உறியடி உத்ஸவம் நடைபெற உள்ளது.


குழந்தைப்பேறு கிடைக்கவும், திருமணத் தடை நீங்கவும், நாகதோஷம் நீங்கவும், நீண்ட நாள் நோய்கள் குணமாகவும், கலைத்துறைகளில் முன்னேற்றம் காணவும் சிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்குகிறகு இந்த ஊத்துக்காடு ஸ்ரீ காளிங்க நர்த்தன கிருஷ்ணன் கோயில். தென்கோகுலம், தேனுஸ்வாஸபுரம், ஸ்ரீ விஷ்ணு தாண்டவத்ஸ்தலம் என்ற சிறப்புகளையும் இந்த கோயில் பெற்றுள்ளது.

கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு இக் கோயிலில், ஆகஸ்ட் 24-ம் தேதி, ஏகதின லட்சார்ச்சனையும், 25-ம் தேதி வியாழக்கிழமை ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தி உறியடி உத்ஸவமும் நடைபெற உள்ளது. 26-ம் தேதி, ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனையும், மஹா தீபாராதனையும் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



Leave a Comment