சபரிமலை கோயில் நடை திறப்பு


பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. கோயில் தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் முன்னிலையில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்தினார். அதன் பிறகு இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. 15 ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை தினமும் கணபதி ஹோமம், உஷபூஜை, புஷ்பாபிஷேகம் உள்பட வழக்கமான பூஜைகள் நடைபெறும். 19ம் தேதி இரவு 10 மணிக்கு பங்குனி மாத பூஜைகள் நிறைவடையும்.இதன் பின்னர் பங்குனி உத்திர திருவிழாவிற்காக 20ம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்படும்.



Leave a Comment