சமயபுரம் மாரியம்மனுக்கு பூக்களால் அபிஷேகம்...


பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயில் ஆண்டுதோறும் மாசி மாத கடைசி வார ஞாயிற்றுக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெறுவதையொட்டி ஞாயிற்றுக்கிழமை காலை விக்னேஷ்வர பூஜை, புண்ணியாக வாசனம், வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து காலை 6.45-க்கு மீன லக்னத்தில் கோயில் இணை ஆணையர் சி. குமரதுரை, கோயில் ஊழியர்கள், ஊர்ப் பிரமுகர்கள் தட்டு, கூடைகளில் பூக்களை சுமந்து கொண்டு யானையுடன், மேள தாளத்துடன் ஊர்வலமாகச் சென்று காலை 8 மணிக்கு அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து காப்புக் கட்டப்பட்டது.



Leave a Comment