நெல்லையப்பர் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல்


திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது.
கல்லிடைக்குறிச்சியில் உள்ள மாணிக்கவாசகர் வழிபாட்டுக்குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை முன்னிட்டு, காலையில் விநாயகர் துதி, நால்வர் துதி, சாத்திர தோத்திர அருளாளர்கள் துதி பாராயணம் நடைபெற்றது.


பன்னிரு திருமுறைகளில் மூவர் முதலிகள் அருளிய திருக்கடைக்காப்பு, தேவாரம், திருப்பாட்டி ஆகிய ஏழு திருமுறை பதிகங்கள் பாடப்பட்டன.
பின்னர் திருவாசக முற்றோதுதல் ஞானவேள்வி தொடங்கியது. மழைவளம் பெறுக வேண்டியும், உலக நன்மைக்காகவும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. பகலில் மாகேஸ்வர பூஜை நடைபெற்றது. மாலையில் திருக்கோவையார், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருமந்திரம், திருமுக பாசுர பாடல்கள் பாடப்பட்டன.


வழிபாட்டில் வேளாக்குறிச்சி ஆதீன குருமகா சந்நிதானம் சத்யஞான மகாதேவ தேசிக பரமாச்சார்ய சுவாமிகள், செங்கோல் ஆதீன குருமகா சந்நிதானம் சிவப்பிரகாச தேசிக சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



Leave a Comment