திருப்பதி மலையப்பசாமிக்கு ஜேஷ்டாபிஷேகம்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு ஜேஷ்டா மாதத்தில் ஜேஷ்டா நட்சத்திரம் முடிவதற்குள் ஜேஷ்டாபிஷேகம் நடப்பது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டுக்கான ஜேஷ்டாபிஷேகம் வருகிற 24-ந்தேதியில் இருந்து 26-ந்தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு உற்சவர் மலையப்பசாமி மீது அணிவிக்கப்பட்டு இருக்கும் தங்க கவசம் 19-ந்தேதி அகற்றப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து 24-ம் தேதி உற்சவருக்கு ஹோமம், அபிஷேகம் ஆகியவை நடத்தப்படுகிறது.

25-ம் தேதி உற்சவரான மலையப்பசாமிக்கு முத்துக்கவசமும், 26-ம் தேதி தங்கக் கவசமும் அணிவிக்கப்பட்டு நான்கு மாடவீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.



Leave a Comment