எல்லையம்மனுக்கு 2007 இளநீர் அபிஷேகம்.


பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் பிரசித்தி பெற்ற ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 7-ம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், விஷேச பூஜைகளும் நடைபெற்றது. முன்னதாக பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலிலிருந்து ஏராளமான பக்தர்கள் 2007 இளநீரை தலையில் சுமந்தபடி டிரங்க் சாலையில் குமணன்சாவடி ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக நடந்து வந்தனர். உடன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊர்வலம் வந்தது. பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த இளநீரால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், 5 ஆயிரம் பேருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. மாலையில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.



Leave a Comment