மகரஜோதி தரிசனம்; சபரிமலையில் குவியும் பக்தர்கள்!


கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில், மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இதற்காக கடந்த மாதம் 30ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை ஜனவரி14ம் தேதி நடக்கிறது. அன்று மாலை பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெறும். மகரவிளக்கு பூஜையை கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மகரவிளக்கு பூஜையையொட்டி ஐயப்பனுக்கு திருவாபரணம் அணிவிக்கப்படுவது வழக்கம். திருவாபரணம் பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் இருந்து ஆண்டுதோறும் திருவாபரணம் ஊர்வலமாக சன்னிதானத்துக்கு எடுத்து செல்லப்படும். ஜனவரி 14 ஆம் தேதி மாலை 6.25 மணியளவில் சன்னிதானம் அடையும். பின்னர் திருவாபரணம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். பின்னர் தீபாராதனை நடைபெறும். இந்த சமயத்தில் தான் பொன்னம்பலமேட்டில் மகரதீப தரிசனம் நடைபெறும்.



Leave a Comment