தைப்பொங்கலுக்கு திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிகாலை நடை திறப்பு


தமிழகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து குலதெய்வத்தை வழிபடுவதற்காக யாதயாத்திரையாக செல்வது வழக்கம். தைப்பொங்கல் அன்று தமிழ்கடவுளான முருகனை வழிபட்டால் எல்லா நன்மையும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு விரதமிருந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வரத்தொடங்கியுள்ளனர். பக்தர்கள் அதிகாலையில் கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்வர். பின்னர் தங்கள் வீடுகளுக்குச் சென்று பொங்கலிட்டு கதிரவனுக்கு படைப்பது வழக்கமாகும். பக்தர்களின் வசதிக்காக தைப்பொங்கல் அன்று அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது.



Leave a Comment