போகியில் நோய், நொடிகள் பறந்தோட !


மாரியம்மன் என்றால் மாரியின், அதாவது மழையின் தேவதை என்று பொருள். மாதம் மும்மாரி பொழிய மாரியம்மனைதான் வேண்டி வணங்குவார்கள் விவசாயப் பெருமக்கள். விவசாயிகள் ஆண்டு முழுவதும் விளைவித்த உணவுப்பொருட்களை எல்லாம் மார்கழியில் அறுவடை செய்து தை மாதத்தில் விற்பனைக்கு அனுப்புவர். தை முதல் நாள் பொங்கல். அரிசி, மஞ்சள், கரும்பு என எல்லா விளைபொருட்களும் மக்களிடம் வந்து சேரும் . எனவே கடந்தாண்டு வேண்டிய மழையை பெய்வித்து, விளைபொருட்களை நல்ல முறையில் விளைவிக்க அருள் செய்த மாரியம்மனுக்கு நன்றி தெரிவிக்கவே போகி பண்டிகையன்று அம்மன் வழிபாடு நடத்துகிறோம். தை மாதத்திற்கு பிறகு உஷ்ணம் தொடங்கும் என்பதால், கோடையில் பரவும் நோய்களை தடுக்கும் விதமாக அம்மாதங்களிலும் மழையை பெய்விக்க வேண்டி மாரியம்மனிடம் வேண்டிக்கொள்ள வேண்டும். மாரியம்மனுக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்குமாம். எனவே மாரியம்மன் வழிபாடு என்பது குழந்தைகளுக்கு நோய் நொடிகள் ஏதும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வாள். போகியில் சாமி கும்பிடும்போது மாரியம்மன் பாடல்கள், மாரியம்மன் தாலாட்டு ஆகிய எளிய தமிழ் பாடல்களை பாடி அன்னையை குளிர்விக்கலாம்.



Leave a Comment