தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா


நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா ஜனவரி 28-ந்தேதி தொடங்குகிறது. தோரணமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா 28-ந்தேதி தொடங்குகிறது. தென்காசி-கடையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள இக்கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 28-ந் தேதி காலை 6 மணிக்கு தொடங்கு கிறது. அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது. தொடர்ந்து மூலவர்-உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உற்சவமூர்த்தி அந்த பகுதியில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. 30-ந் தேதி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 31-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடக்கிறது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காலை 9.05 மணிக்கு மலைஅடிவாரத்தில் உள்ள சொக்கலால் கலையரங்கில் சுவாமி- வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து ஊட்டி படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனமும், அன்னதானமும் நடக்கிறது. சந்திரகிரகணத்தை முன்னிட்டு மாலை 3.30 மணி அளவில் கோவில் நடை அடைக்கப்படுகிறது.



Leave a Comment