வரதராஜ பெருமாள் கோயிலில் காஞ்சி ஜயேந்திரர் வழிபாடு


காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 14 ஆண்டுகளுக்கு பிறகு அங்குள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் தரிசனம் செய்தார். அவருக்கு ஸ்ரீசடாரி கொண்டு வரப்பட்டு, 16 கால் மண்டபத்தில் ராஜ்ய சன்யாசிகளுக்கு வழங்கப்படும் பஞ்ச முத்திரை மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கோயில் ராஜகோபுரத்தின் அருகில் அற நிலையத்துறை உதவி ஆணையர், பட்டாச்சாரியர்கள் ஆகியோர் மடாதிபதிகளுக்கு வழங்கும் பூரண கும்ப மரியாதையை ஜயேந்திரருக்கு அளித்து வரவேற்றனர். இதையடுத்து கோயிலுக்கு உள்ளே சென்று தாயார் சந்நிதியில் தரிசனம் செய்தார். அதன்பிறகு, வரதராஜ பெருமாள் சந்நிதியில் வழிபட்டார். முன்னதாக, 16 கால் மண்டபத்திலிருந்து ராஜகோபுரம் வரை நடந்து வந்தார். ஜயேந்திரரை அவரது சீடர்கள் பல்லக்கில் தூக்கிச் சென்று தரிசனம் செய்வித்தனர். 14 ஆண்டுகளுக்கு பிறகு வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்த ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஏராளமான பக்தர்கள் ஆசி பெற்றனர்.



Leave a Comment