திருப்பதி கோவிலில் கூடுதல் கண்காணிப்பு !


பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் மாடவேதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் துவங்கியுள்ளன.
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலை சுற்றி 280 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தீவிரவாத அச்சறுத்தல் உள்ள நிலையில் கோயிலுக்கும் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்யும் விதமாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனையடுத்து, 4 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவில், அதிநவீன கேமிராக்கள் பொருத்த முடிவு செய்து ஆய்வு அறிக்கை வழங்கப்பட்டது. இதன்படி முதல் கட்டமாக உயர்பாதுகாப்பு இடமாக கருதப்படும் கோயில் மற்றும் நான்கு மாடவீதிகளில் 280 கேமிராக்கள் பொருத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. இதேபோல் மற்ற இடங்களில் மீதமுள்ள கேமிராக்கள் பொருத்தப்படவுள்ளது.



Leave a Comment