திருப்பதி கோவிலில் வருடாந்திர தெப்ப உற்சவம்


திருப்பதி கோவிலில் வருடாந்திர தெப்ப உற்சவம் மார்ச் 8–ந்தேதி துவங்குகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏராளமான திருவிழாக்கள் நடக்கின்றன. அதில், தெப்ப உற்சவமும் முக்கியமான விழாவாகும்.
இந்த ஆண்டுக்கான வருடாந்திர தெப்ப உற்சவம் வருகிற மார்ச் 8-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
8-ந்தேதி முதல் நாள் ராமர், சீதை, லட்சுமணர் ஆகியோர் புஷ்கரணிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் எழுந்தருளி 3 சுற்று வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
9-ந்தேதி 2-வது நாள் ஸ்ரீகிருஷ்ணர், ருக்மணியோடு சிறப்பு அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்று வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
10-ந்தேதி 3-வதுநாள் உற்சவர்களான மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி 5 சுற்று பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
11-ந்தேதி 4-வது நாளும், 12-ந்தேதி 5-வதுநாளும் உற்சவர்களான மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தெப்பத்தில் எழுந்தருளி 7 சுற்று வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று தங்க கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
எனவே கோவிலில் வருடாந்திர தெப்ப உற்சவம் நடைபெற உள்ளதால், 12-ந்தேதி நடக்கும் கருட வாகன வீதி உலா ரத்து செய்யப்படுகிறது என்று திருமலை- திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.



Leave a Comment