திருத்தணி முருகன் கோயிலில் மாசிப் பெருவிழா ....


திருத்தணி முருகன் கோயிலில் மாசிப் பெருவிழா மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி வரும் மார்ச் 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மார்ச் 1 ஆம் தேதி புதன்கிழமை இரவு அனுக்ஞை, அங்குரார்ப்பணம், விநாயகர் உலாவுடன் விழா தொடங்குகிறது.
அதனை தொடர்ந்து வியாழக்கிழமை காலை 5.30 மணி அளவில் கொடியேற்றமும், இரவு 7 மணிக்கு கேடய உலாவும் நடைபெறுகிறது. மார்ச் 3 ஆம் தேதி காலை வெள்ளி சூரிய பிரபையும், இரவு 7 மணிக்கு பூத வாகனத்தில் உற்சவமும் நடைபெறுகிறது. மார்ச் 4 ஆம் தேதி காலை சிம்ம வாகனத்திலும், இரவு 7 மணிக்கு ஆட்டு கிடாய் வாகனத்திலும் வீதியுலா நடைபெறுகிறது. மார்ச் 5 ஆம் தேதி காலை பல்லக்கு சேவையும், இரவு வெள்ளி நாக வாகனத்திலும், மார்ச் 6 ஆம் தேதி காலை அன்ன வாகனத்திலும், இரவு வெள்ளி மயில் வாகனத்திலும், செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு புலி வாகனத்திலும், இரவு 7 மணிக்கு யானை வாகனத்திலும் உற்சவர் பவனி வருகிறார். மார்ச் 8 ஆம் தேதி இரவு 7 மணிக்கு தங்கத் தேரிலும், மார்ச் 9 ஆம் தேதி காலை யாளி வாகனத்திலும் உற்சவர் வலம் வருகிறார். மாலை 5 மணிக்கு ஆறுமுக சுவாமி கோயிலில் பாரிவேட்டையும், இரவு 1 மணிக்கு குதிரை வாகனத்தில் வள்ளியம்மை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
மார்ச் 10 ஆம் தேதி காலை 6 மணிக்கு கேடய உலாவும், மாலை 5 மணிக்கு கதம்பப் பொடி விழாவும் இரவு 8 மணிக்கு ஆறுமுக சுவாமி உற்சவமும், மார்ச் 11 ஆம் தேதி காலை 5 மணிக்கு சண்முக சுவாமிக்கு தீர்த்தவாரி உற்சவமும், மாலை 5 மணிக்கு கொடி இறக்கமும், மார்ச் 12 ஆம் தேதி மாலை 4 மணிக்கு சப்தாபரணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
தினசரி மூலவர் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் வே.ஜெயசங்கர், கோயில் இணை ஆணையர் செ.சிவாஜி, கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.



Leave a Comment