திருத்தணி முருகனை தரிசிக்க ஆன்லைன் முன்பதிவு


திருத்தணி முருகனை தரிசிக்க இனி ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறுபடை வீடுகளில் ஐந்தாம்படை வீடாக திகழ்கிறது திருத்தணி முருகன் கோயில்.
கோயிலுக்கு தமிழகம் மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இவர்கள் கட்டணம் தரிசனம், இலவச தரிசன வழியாக சென்று முருகனை தரிசனம் செய்கின்றனர்.
இந்த நிலையில், ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி பஞ்சாமிர்தம் அபிகேஷகத்துக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பால் அபிஷேகம் 100, சந்தன காப்பு 4 ஆயிரம், கல்யாண உற்சவம் 2 ஆயிரம், தங்கத்தேர் இழுக்க 2 ஆயிரம், வெள்ளித் தேர், வெள்ளி மயில்வாகனம் 3,500, கேடய உற்சவம் 1000, மூலவருக்கு தங்க கவசம் அணிவிக்க 500, சிறப்பு தரிசன டிக்கெட 100, குளிர்சாதன அறை வாடகை ஒரு நாளைக்கு 1500, சாதாரண அறை 450, சாதாரண குடில் 900 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்ய www.tirutanigaimurugan.tnhrce.in என்ற முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது.



Leave a Comment