காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா....


காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில், 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறும் என காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
51 சக்தி பீடங்களில் ஒன்றான, உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சி காமாட்சியம்மன் கோயில் 1841 ஆம் ஆண்டும், 1941-ஆம் ஆண்டும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து 1976, 1995ஆம் ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி கோயில் புனரமைப்புப் பணிக்காக ரூ.25 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதில், கருவறையின் மேல் உள்ள தங்க விமானத்திற்கு ரூ.20 கோடி செலவில் 60 கிலோ தங்கத்திலான 5 அடுக்கு தங்கம் ஒட்டப்பட்டு மிளிரும் வகையில் திருப்பணிகள் நடைபெற்று வருவதாக பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளார்.



Leave a Comment