இருள் நீக்கும் தீப ஒளி....


வாழ்க்கையில் துன்பமயமான இருள் அகன்று ஒளிமயமான நல்ல எதிர்காலம் உதயமாகவேண்டும் என்பதற்கு பொருத்தமான நாளாக அமைந்துள்ளது தீபாவளித் திருநாள்.
வரிசையாக தீபங்களை ஏற்றிக்கொண்டாடுவதே தீபாவளிப் பண்டிகையின் சிறப்பாகும். புற ஒளி ஏற்றி உள் ஒளி பெறுவதே தீபாவளியின் மகத்துவமாகும்.
புற இருள் தன்னைக் காட்டும், ஏனைய பொருள்களை மறைக்கும். ஆணவ இருள் தன்னையும் மட்டுமன்றி பிறபொருள்களையும் மறைத்து நின்று பெரும் துன்பத்தைச் செய்யும் இதனை மனதிற்கொண்டு தீபாவளியன்று ஆலயங்களில் ஒளி விளக்கேற்றியும், இதயங்களில் ஞான விளக்கேற்றியும் அருட்பெரும் ஜோதியான ஆண்டவனை வழிபடுவதன் மூலம் ஆணவ இருள் அகலும் இருள் நிலவிய இடத்தில் இன்பம் விளையும்” என்கிறார் திருமுருக கிருபானந்த வாரியார்.
தீபாவளி நன்னாளிலே செய்யப்படுகின்ற இறைவழிபாடும் பிரார்த்தனையும் அனைவரினதும் வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தை தோற்றுவிக்கும் என நம்பிக்கை வைப்போம்!



Leave a Comment