பழமுதிர்ச்சோலையில் நவம்பர் 5-ம் தேதி சூரசம்ஹாரம்....


பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 31-ல் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் விழா நவம்பர் 5 ஆம் தே நடைபெறுகிறது.
மதுரை மாவட்டம் அழகர் மலையில் உள்ள அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா அக்டோபர் 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திங்கள்கிழமையன்று காலையில் 9.15 மணிக்கு விக்னேஷ்வரர் பூஜையுடன் தொடங்குகிறது.
நவம்பர் 1 ஆம் தேதியன்று, மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர் காட்சி தருவதும், தங்க ரத உலாவும் நடைபெறும். தொடர்ந்து நாள்தோறும் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக நவம்பர் 5-ம் தேதி சனிக்கிழமையன்று சூரசம்ஹார விழாவும் நடைபெற உள்ளது.



Leave a Comment