திருப்பதியில் பிரம்மோற்சவ ஏற்பாடுகள் தீவிரம்....


பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருப்பதியில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைப்பாதை மார்க்கங்களுக்கு செல்ல தேவஸ்தானம் சார்பில் இலவச பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரம்மோற்சவ சமயத்தில் சுமார் 7 லட்சம் லட்டுகள் இருப்பில் வைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல திருப்பதியில் சுமார் 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் கருட சேவையின் போது மட்டும் கூடுதலாக 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரம் தனியார் வாகனங்கள் நிறுத்துவதற்காக ஏதுவாக 4 இடங்களில் பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டு உள்ளதாகவும், 537 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வெடி குண்டு நிபுணர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மோப்ப நாய் உதவியுடன் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக 22 ஆம்புலன்சுகள் மற்றும் 4 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விழா தொடர்பாக, பக்தர்கள் தேவஸ்தானத்துக்கு ஆலோசனைகளை வழங்க 1800-425-111111 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Leave a Comment