சிவ ஸ்வரூபமான மஹா பெரியவா


மஹா பெரியவா என்று தனது பக்தர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் காஞ்சி சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகள் . காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதியான இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்கள் இருக்கிறார்கள் . இன்றும் அவரை தெய்வத்திற்கு இணையாக மக்கள் பூஜிக்க காரணம் காஞ்சி பீடத்தின் மடாதிபதி என்கிற எந்த டாம்பீகமும் காட்டாமல் ,தன்னை நாடி வரும் பக்தர்களிடம் தனது கருணை மழையை தாராளமாக பொழிந்தவர் .
அஷ்டமா சித்திகளை முழுமையாக கைவர பெற்றவராக இருந்தாலும் , அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் எளிமையின் உருவமாக , நடமாடும் தெய்வமாக திகழ்ந்த மகான் . இன்றும் காஞ்சி மடத்தில் உள்ள அவரின் அதிஷ்டானத்தின் முன்னே நின்று தங்களது கோரிக்கையை சொல்லி பலனடைபவர்கள் அநேகர் .
எத்தனையோ அபூர்வ அதிசயங்களை அசாதாரண நிகழ்ச்சிகளை தனது தபோ பாலா சக்தியினால் சர்வ சாதாரணமாக காதும் காதும் வைத்தாற்போல் நடத்திக் காட்டிய நடமாடும் தெய்வம். பலரின் வாழ்க்கையில் அவர் நடத்திய , நடத்திக் கொண்டிருக்கும் அற்புதங்கள் பல .

அதில் நெஞ்சை நெகிழவைக்கும் ஒரு சம்பவம் இதோ .
நாள் தோறும் பெரியவா காலையில் எழுந்தவுடன் மடத்தில் இருக்கும் தொழுவத்தில் கோ தர்சனம் (பசுவை தரிசிப்பது வழக்கம்)
மாலை வேளைகளில் பசுமாடுகள் கட்டியிருந்த கொட்டகை சென்று அங்கு அமர்ந்து வேளைகளில் உரையாடுவது வழக்கம்.சுற்றியிருக்கும் மக்களைக் கொசுக்கள் பிடுங்கி எடுக்கும். அவர் கொசுவையா லட்சியம் பண்ணுவார் ? எதைப் பற்றியும் சிந்திக்காமல், தான் சொல்ல நினைத்தது எதுவோ அதை மட்டும் எல்லோருக்கும் சொல்லிக்கொண்டே இருப்பார். அவரை நேரடியாக பார்த்து அவர் சொல்வதைக் கேட்டவர்களுக்கு இனி பிறவி கிடையாது என்பது நிச்சயம்.
ஒருநாள் அவர் இவ்வாறு காலை கோதர்சனம் சயந்திரம் அங்கு பக்தர்களோடு சம்பாஷணை செய்யும்போது அந்தக் கொட்டகையில் உள்ள ஒரு பசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது. பேறுகாலம்.அதனால் பசு வேதனைப்பட்டுக்கொண்டே இருந்ததே தவிர, அதனால் கன்றை ஈன்றெடுக்க முடியவில்லை.வைத்தியர்கள்
வரவழைக்கப்பட்டனர்.கால்நடைத் துறையில் சிறந்து விளங்கும் டாக்டர்கள் அவர்கள்; ஒருவர் அல்ல இருவர் அல்லர், காஞ்சிமகான் மடம் என்பதால் ஆறுபேர் வந்திருந்தனர்.

பசுவை நன்றாகப் பரிசோதித்துப் பார்த்த அவர்கள், பசு ஏன் இன்னமும் பிரசவிக்க வில்லை என்கிற காரணத்தைக் கண்டு பிடித்தனர். கன்றுக்குட்டி வயிற்றுக்குள் இறந்து போயிருந்தது. அதை வெளியே எடுக்காவிட்டால் பசுவும் இறந்துவிடும். அந்த ஆறுபேரும் ஏகோபித்து சொன்ன முடிவு அது. இதைக் கேட்ட நிர்வாகிகள்
நேராக மகானிடம் போய் மெதுவாக விஷயத்தைச் சொன்னார்கள். தன் இருக்கையை விட்டு எழுந்த அவர், நேராக பசு இருந்த கொட்டகைக்கு வந்தார். பசுவின் எதிரே அமர்ந்தார். அவரது பார்வை வேறு பக்கம் திரும்பவே இல்லை.கன்று வயிற்றுக்குள் இறந்து போயிற்று என்று ஏகோபித்த முடிவாகச் சொன்ன டாக்டர்கள் ஒருபக்கமாக நின்று, மகானையும், பசுவையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். இப்படியும் அப்படியுமாக நிலைகொள்ளாமல் தடுமாறிக் கொண்டிருந்த பசு..... ஓர் இடத்தில் நின்றது. சற்று நேரத்தில் அதன் வயிற்றில் இருந்த கன்றுக்குட்டி வெளியே வந்தது. துள்ளியபடி நின்றது.இறந்து போனது என்று டாக்டர்கள் சொன்ன அதே கன்றுதான் உயிரோடு வெளியே வந்தது. இறந்ததாக பெரிய பெரிய வேடேரினரி சர்ஜன்கள் அடித்து சொன்ன கன்றுக்குட்டி எப்படி உயிர் பெற்றது???
ஆறு டாக்டர்களுக்கும் இது விந்தையான நிகழ்ச்சிதான். அவர்களும் அப்போதுதான் மகானின் அருட்பார்வை எப்படிப்பட்டது என்கிற பேருண்மையைத் தெரிந்துகொண்டனர்.பசுமாட்டை நன்றாகத் தடவிக் கொடுத்தபின் புன்னகையோடு மஹா பெரியவா உள்ளே போனார்.

பெரியவா தரிசனம் கோடி புண்ணியம் . புண்ணியத் தேடலை தொடருவோம்...



Leave a Comment