திருத்தணி முருகன் கோயிலில் அபிஷேக கட்டணங்கள் திடீர் உயர்வு...


திருத்தணி முருகன் கோயிலில் அபிஷேக கட்டணங்களை கோயில் நிர்வாகம் உயர்த்தி உள்ளது. திருத்தணி முருகன் கோயில் அறுபடை வீடுகளில் 5-ம் இடத்தில் சிறப்புற விளங்கி வருகிறது. இக்கோயிலில் ஆடி கிருத்திகை, மாசி பிரமோற்சவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான மக்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், திருத்தணி முருகன் கோயிலில் அபிஷேக கட்டணங்களை கோயில் நிர்வாகம் வெகுவாக உயர்த்திவிட்டது. முருகனுக்கு பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களுக்கு ரூ.1,500 என கோயில் நிர்வாகம் தற்போது கட்டணம் நிர்ணயித்துள்ளது.



Leave a Comment