நெல்லையப்பர் கோயிலில் தங்கத்தேர்


திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோயிலில் தங்கத்தேர் செய்யப்பட்டதன் எட்டாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி சிறப்பு தேரோட்டம் நடைபெற்றது.

நெல்லையப்பர் கோயிலில் உபயதாரர்கள் மூலமாக 10.5 கிலோ தங்கம், 25 கிலோ வெள்ளியில் சுமார் 6 அடி உயரத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு அம்பாளுக்கு தங்கத்தேர் செய்யப்பட்டது. கடந்த 2009ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இத்தேர் வெள்ளோட்டம் விடப்பட்டு கோயிலுக்கு வழங்கப்பட்டது.


திருவிழாக்கள் உள்ளிட்ட முக்கிய நாள்களில் தங்கத்தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து வழிபட்டு வருகின்றனர்.
தங்கத்தேர் செய்யப்பட்டதன் 8ஆவது ஆண்டு தொடக்க விழாவை அடுத்து, மாநகர காவல் ஆணையர் இரா.திருஞானம் தலைமையில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.



Leave a Comment