திருப்பதியில் நடிகர் சிவகார்த்திகேயன்....


ரெமோ திரைப்படம் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் திருமலை சென்று ஏழுமலையானை வழிபட்டார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடன் ஏழுமலையானை வழிபட திங்கள்கிழமை இரவு திருமலைக்கு வந்தார். இரவு திருமலையில் தங்கிய அவர் செவ்வாய்க்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்புப் பிரசாதங்கள் வழங்கினர். கோயிலை விட்டு வெளியே வந்த அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள பக்தர்கள் போட்டிபோட்டனர்.



Leave a Comment