பத்மாவதி தாயாருக்கு வெண்பட்டு குடைகள்


கார்த்திகை பிரமோற்சவத்தின் முக்கியமான விழாவான கஜவாகன சேவைக்கு இந்து தர்மார்த்த சமிதி சார்பில் வெண்பட்டு குடைகள் பத்மாவதி தாயாருக்கு சமர்ப்பணம் செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு கார்த்திகை பிரம்மோற்சவத்தை முன் னிட்டு சென்னையில் இருந்து திருச்சானூருக்கு திருக்குடைகள் கொண்டு செல்லப்பட்டன. பத்மாவதி தாயார் கோயில் எதிரில் உள்ள வாகன மண்டபத்தில், இந்து தர்மார்த்த சமிதி அறங்காவலர் ஆர்ஆர். கோபால்ஜியிடம் இருந்து, திருமலை திருப்பதி தேவஸ்தான சிறப்பு துணை செயல் அதிகாரி முனிரத்தினம் ரெட்டி வெண்பட்டு குடைகளை பெற்றுக்கொண்டார்.
திருமலை பிரமோற்சவத்துக்கும், தாயார் பிரமோற்சவத்துக்கும் தமிழக மக்கள் சார்பாக திருக்குடைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த குடைகள் சுவாமி ஊர்வலத்தின் போது பயன்படுத்தப்படுகின்றன. இதேபோல், திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின்போது இந்து தர்மார்த்த சமிதி வெண்பட்டு குடைகளை சமர்ப் பணம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.



Leave a Comment