கார்த்திகை தீப திருவிழா முன்னிட்டு அம்மன் உற்சவம்....


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 12 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அம்மன் உற்சவம் நடத்தப்பட உள்ளது
நவம்பர் 12 ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா அம்மன் உற்சவம் தொடங்குகிறது. முதல்நாளில் காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன் வீதிஉலா நடக்கிறது.
தொடர்ந்து டிசம்பர் 1-ந் தேதி சிம்ம வாகனத்தில் பிடாரி அம்மன் உற்சவம், 2-ந் தேதி மூஷிக வாகனத்தில் விநாயகர் உற்சவம் நடக்கிறது. 3-ந் தேதி காலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றபடுகிறது.
இதனையடுத்து தினமும் சாமி வீதி உலா நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக டிசம்பர் 9-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. 12-ந் தேதி அதிகாலை பரணி தீபம், மாலையில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
கார்த்திகை தீப திருவிழாவையொட்டி அருணாசலேஸ்வரர் கோவில் மின் அங்காரத்தில் ஜொலிக்கிறது.



Leave a Comment