சின்ன சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் பவனி


திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் ஆண்டுப் பிரம்மோற்சவத்தின் முதல் நாளில் சின்ன சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வரும் நான்காம் தேதி வரை ஒன்பது நாட்கள் நடக்கிறது. கொடியேற்றத்தை தொடர்ந்து கோவில் மண்டபத்தில் பத்மாவதி தாயாருக்கு பட்டு வஸ்திரங்கள் சாத்தி, தங்க நகைகள் அணிவித்து ஊஞ்சல் சேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 8 மணிக்கு சின்ன சேஷ வாகனத்தில் பத்மாவதி தாயார் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வாகன சேவையின் முன்னும் பின்னும் நடன குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து 9 நாட்கள் நடக்கும் விழாக்களின் போது காலை, மாலை 2 வேளைகளிலும் பத்மாவதி தாயாருக்கு வாகன சேவை உற்சவம் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்க தேரோட்டம் வருகிற ஒன்றாம் தேதி மாலையும், இரவு கருட சேவையும் நடக்கிறது.



Leave a Comment