திருப்பதியில் பக்தர்களின் வசதிக்காக....


திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் ரூ.500, ரூ.1000 பெறப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் இருந்து டிக்கெட் மற்றும் பிரசாத கட்டணமாக ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் பெறப்படும். மேலும், ஆந்திர அரசு பஸ்களில் வந்து செல்லும் பக்தர்களிடம் இருந்து ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு விதித்துள்ள காலக்கெடு முடியும் வரையில் இவ்வாறு பெறப்படும் என கூறப்பட்டுள்ளது.
திருமலையில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களிடம் ஓட்டல்கள், கடைகளில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாங்க மறுப்பதால், பக்தர்கள் பாதிக்காத வகையில், அவர்களுக்கு தேவையான பால், டீ, மோர், அன்னப்பிரசாதம் போன்றவை தரிகொண்டா வெங்கமாம்பாவில் மட்டுமல்லாமல் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில் தேவஸ்தானம் சார்பில் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Leave a Comment