ரங்கநாதர் ஊஞ்சல் உற்சவம்.....


ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் துவங்கியது. நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார். ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
ஊஞ்சல் உற்சவம் இரவு 7.15க்கு தொடங்கி 8க்கு நிறைவடைகிறது. முக்கிய நிகழ்ச்சியான 7ம் நாள் அக்டோபர் 24ம் தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 6க்கு புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளிய பின், இரவு 7க்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு கண்டருள்கிறார். நிறைவு நாளான அக்டோபர் 26ம் தேதி நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருள்கிறார். மற்ற நாட்களை விட அன்றைய தினம் நம்பெருமாள் ஊஞ்சலாட்டம் அதிக நேரம் நடைபெறும். ரங்கம் சார்பு கோயிலான திருவெள்ளறை பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்சவமும் நேற்று தொடங்கியது.



Leave a Comment