மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கந்தசஷ்டி விழா...


மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை கந்தசஷ்டி விழா நடைபெறுகிறது. நவம்பர் 6 ஆம் தேதி காலை 7 மணிக்கு திருக்கோயிலில் உள்ள அருள்மிகு கூடல்குமாரருக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படியாகி சண்முகார்ச்சனை நடைபெறும்.

நவம்பர் 14 ஆம் தேதி உச்சிக்காலத்தில் அருள்மிகு சுந்தரேசுவரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். உபயதாரர் நிகழ்ச்சி ரத்து: அக்டோபர் 29 ஆம் தேதி முதல் நவம்பர் 6 ஆம் தேதி வரை திருக்கோயிலில் உபயதாரர்களின் சார்பில் திருக்கல்யாணம், தங்கரத உலா ஆகியவை நடத்தப்படாது என கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Leave a Comment