ஊர் நன்மைக்காக ஒரு திருவிழா...


நாமக்கல் மாவட்டம், ஈச்சம்பட்டி என்ற கிராமத்தில் ஊர் நன்மைக்காக நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த வீரகாம பெருமாள் கோவில் திருவிழா நடத்தப்பட்டது.
இந்த கோவிலில், 14 வருடங்களாக திருவிழா நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று, பாரம்பரிய முறையில் வீரகாமபெருமாள் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. மனிதர்கள் மண்டியிட்டு செல்லக்கூடிய 4 அடி உயரம் கொண்ட இடைவெளியில், மாடு பிடித்தவர் மண்டியிட்டு குனிந்து செல்ல, அவரை பின்பற்றி கோவில் காளையும், சிறிய இடைவெளியில் நுழைந்து வந்ததை கண்ட கிராமமக்கள் மகிழ்ச்சியுடன் ஆராவாரம் செய்தனர்.
இந்நிகழ்வை தொடர்ந்து, 20க்கும் மேற்பட்ட ஆண்கள் பாரம்பரிய முறையில் நடனமாடியது பார்வையாளர்களை கவரும் வகையில் இருந்தது.



Leave a Comment