சிம்ம வாகனத்தில் பவனி வந்த மலையப்ப சுவாமி


திருமலையில் வருடாந்திரப் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளில் காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்துப் பந்தல் வாகனத்திலும் மலையப்ப சுவாமி மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இப்பவனியின்போது வேதபண்டிதர்கள் வேத பாராயணம் செய்தபடியும், மேளதாளம், பேண்டு வாத்தியம் முழங்க, பெண்கள் கோலாட்ட நடனமாடியும், பக்தி பாடல்களைப் பாடியும், கிருஷ்ணர், நரசிம்மர், காலிங்க நர்த்தன கிருஷ்ணர் போன்றும் வேடமணிந்து வந்தனர். பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் இதில் இடம்பெற்றன.
இரவு 9 மணி முதல் 11 மணி வரை அலங்கரிக்கப்பட்ட முத்துப்பந்தல் வாகனத்தில் தன் உப நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மாடவீதியில் மலையப்ப சுவாமி வலம் வந்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment