திருமலையில் விரைவு தரிசன சேவை ரத்து.....


திருமலையில், அக்டோபர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் 300 ரூபாய் விரைவு தரிசனத்தை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
திருமலையில், பிரம்மோற்சவத்தின் போது, அக்டோபர் 7 ஆம் தேதி இரவு, கருடசேவை நடக்க உள்ளது. கருடசேவை உற்சவத்தை காண திருமலைக்கு, ஐந்து லட்சம் பக்தர்கள் வரை வருவர். அதனால், அக்மடோபர் 7 மற்றும் புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையான, அக்டோபர் 8 என, இரு நாட்களிலும், 300 ரூபாய் விரைவு தரிசனத்தை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

மேலும், பிரம்மோற்சவ நாட்களில், குறைந்த அளவே, விரைவு தரிசன டிக்கெட் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது



Leave a Comment