சிவன் கோயிலில் மனமுருகி வழிபட்ட மோடி....


கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள ஸ்ரீ கந்தேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்தார்.
பாஜக கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு வந்துள்ளார்.
இந்நிலையில் காலை சுமார் 9.10 மணியளவில் கேரள மாநில பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஸ்ரீ கந்தேஸ்வரர் கோயில் வந்த மோடிக்கு ஆலய நிர்வாகத்தினர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வாசலில் கை, கால்களை கழுவிய பின்னர் கோயிலுக்குள் சென்ற மோடி, ஸ்ரீ கந்தேஸ்வரரை மனமுருகி வணங்கி வழிபட்டார்.
பிரதமரின் பெயர், மற்றும் பிறந்த நட்சத்திரம் ஆகியவற்றை குறிப்பிட்டு சிறப்பு அர்ச்சனையும் செய்யப்பட்டது. பின்னர், பிரசாதம் மற்றும் நாராயண குருவின் படம் ஆகியவை அவருக்கு வழங்கப்பட்டது.



Leave a Comment