திருச்சானூரில் வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கியது....


திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் விமரிசையாக தொடங்கியது.
திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில், பக்தர்கள், கோயில் ஊழியர்களால் ஏற்பட்ட தோஷங்களை களையவும், குறைகளை நிவர்த்தி செய்யவும் ஆண்டுதோறும் வருடாந்திர பவித்ரோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது.
அதன்படி, செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் பவித்ரோற்சவம் தொடங்கியது. காலை பத்மாவதி தாயாருக்கு சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் தாயார் முன்னிலையில் பல வண்ண பட்டு நூலிழைகளால் ஆன பவித்ர மாலைகளை அர்ச்சகர்கள் பிரதிஷ்டை செய்தனர். இதில் தேவஸ்தான அதிகாரிகள், கோயில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



Leave a Comment