ஓணம் பண்டிகைக்கு சபரிமலை நடை திறப்பு எப்போது?


ஓணம் பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை செப்டம்பர் 13-ந்தேதி திறக்கப்படுகிறது
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின்போதும் முக்கிய பண்டிகைகளின் போதும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம்.
அதேபோல மகரவிளக்கு பூஜை, மண்டல பூஜையின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.
இதனிடையே ஆவணி மாத பூஜைக்காக சமீபத்தில் திறக்கப்பட்ட ஐயப்பன் கோவில் நடை கடந்த வாரம் அடைக்கப்பட்டது.
இந்த நிலையில் கேரளாவில் ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வருகிற செப்டம்பர் 13-ந்தேதி மாலை சபரிமலை கோவில் நடைதிறக்கப்படுகிறது. அன்று மாலை சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை மட்டும் காட்டப்படும். வேறு பூஜைகள் ஏதும் நடைபெறாது.
மறுநாள் முதல் சுவாமி ஐயப்பனுக்கு வழக்கமான பூஜைகள் நடைபெறும். ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவசம்போர்டு செய்து வருகிறது.



Leave a Comment