திருப்பதியில் இலங்கை அதிபர் .....


இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தனது மனைவியுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக, சிறிசேனா தனது குடும்பத்தினருடன் விமானம் மூலம் பெங்களூருவுக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் இரவு மணிக்கு திருமலைக்கு வந்தார். திருமலையில் ஆந்திர வனத்துறை அமைச்சர் கோபாலகிருஷ்ணாரெட்டி, திருப்பதி எம்.எல்.ஏ. சுகுணா மற்றும் தேவஸ்தான அதிகாரிகள், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் என பலர் அவரை வரவேற்றனர்.
அதிகாலை 2.30 மணிக்கு ஏழுமலையான் கோவிலில் நடந்த சுப்ரபாத சேவையில் சிறிசேனா மற்றும் குடும்பத்தினர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அதிகாலை 5.30 மணியளவில் வி.ஐ.பி. தரிசனத்தில் சென்று மீண்டும் சிறிசேனா குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.
அவருக்கு கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் லட்டு, தீர்த்தப்பிரசாதம், சாமி படம் ஆகியவற்றை திருமலை–திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதுலவாடா கிருஷ்ணமூர்த்தி, தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சாம்பசிவராவ் ஆகியோர் வழங்கினர்.



Leave a Comment