திருச்செந்தூர் கோயிலில் கொடியேற்றம்....


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆவணித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனையும், உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து கொடிபட்டம் கோயிலில் இருந்து வீதி உலா சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தது. சிறப்பு பூஜை செய்யப்பட்டதையடுத்து கொடியேற்றப்பட்டது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment